தை 03ஆம் நாள்:16.01.2021 சனிக்கிழமை குருபூஜை விழா
சற்குரு நவபாஷன சித்தர்
வரலாறு:
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு வடலூரில் இருந்து வந்தவர் சற்குரு நவபாஷன சித்தர் என்று நம்பப்படுகிறது. சந்திக்குப்பம் அருகில் உள்ள புண்ணிய தலமான திருகாஞ்சி காசி விஸ்வநாதரை தரிசிக்க வந்த பொது, சாந்திகுப்பம் மக்களை புரியாத/தெரியாத ஒரு நோய் பல உயிர்களை காவு வாங்கி கொண்டிருந்தது. இதை கேள்வி பட்ட சித்தர், மக்களுக்கு உதவ நல் உள்ளம் கொண்டார். முதலில் நோய்வாய் பட்டவர்களுக்கு நவபாஷன மருந்தை உண்ணும் விதத்தில் செய்து கொடுத்தார். சில நாட்களிலேயே ஊர்மக்கள் அனைவரும் குணம் அடைந்தனர்.
ஊர் பெயர் தெரியாத காரணத்தால், அவரை நவபாஷன சித்தர் என்றே அழைக்க தொடங்கினர். இவரை நாடி வந்தவர்களுக்கு, சிகிச்சை செய்வதையே தொழிலாக கொண்டிருந்தார். பெரும்பாலான நேரங்களில் இவர் தியானத்திலே இருப்பார். பொது நோயாளிகளுக்கு, மண்ணை எடுத்து நெற்றியில் தடவ, அது விபுதி ஆகிவிடும்.
வந்தவருக்கும் உடல்நிலை சில மணி நேரங்களிலே தேறிவிடும். தான் சமாதி அடையும் தருணம் வருவதை முன்னதே அறிந்து கொண்ட இவர், ஒரு சீடரை கூப்பிட்டு "என் காலம் முடிந்த உடன், ஊரில் மேடான ஒரு பகுதியில் சமாதி அமைக்க கட்டளை இட்டார்". அன்றைய தினம் வந்ததும் மக்களை அழைத்து, பச்சரிசி சாதம் பொங்கிவரும்படி கூறினார். ஒரு செப்பு தகட்டில் சில மந்திரங்களை எழுதி அந்த சாதத்தில் வைத்தார். அந்த செப்பு தகடு சாதத்தோடு உருகி கரைந்தது. அதை உண்டார். யோகநிலையில் அசைவற்று இருந்தார். சித்தர் ஆணை இட்டப்படி, மேடான ஒரு இடத்தில் அவரை சமாதி நிலையில் வைத்து மூடிவிட்டனர். இன்றும் தன்னை நாடி வருபவர்களுக்கு, சமாதி நிலையில் இருந்து அருள் செய்கிறார். வருடம் தோறும் தை பூசம் அன்று பச்சரிசி கஞ்சி செய்து சிறப்பு பூஜை செய்கின்றனர்.
முகவரி:
சற்குரு நவபாஷன சித்தர் மடம்,
ஓதியம்பட்டு மெடிமிக்ஸ் கம்பெனி அருகில்
சந்திக்குப்பம்,கடலூர்
வழி:வில்லியனுர் டு முருங்கம்பாக்கம்
தொடர்புக்கு:9442032081
லொகேஷன்:https://goo.gl/maps/unMaAxmub6itgxzKA
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg


No comments:
Post a Comment